Tamil–Muslim Political Parties Council Meets Indian High Commissioner Santosh Jha | ACMC
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் (Council of Tamil Speaking Political Parties) பிரதிநிதிகள், அவர்களது வேண்டுகோளின் பேரில், கொழும்பில் நேற்று (04) மாலை இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்களை இந்தியா இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, தமிழ் பேசும் மக்களுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள், பேரவையின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் அரசியல் தலைமைத்துவங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் தொடர்பில் பேரவையின் பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தனர்.
மேலும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது பொருத்தமான விடயம் அல்ல எனவும், எனவே இவ்விடயத்தில் இந்தியா பங்காளராக இருந்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், காணி தொடர்பான பிரச்சினைகள், அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) சார்பில் அதன் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் என்.ரீ.எம்.எம். தாஹிர் மரைக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Representatives of the Council of Tamil – Muslim Political Parties met with the Indian High Commissioner His Excellency Santosh Jha, this evening (4) on their request, at “India House”, Colombo.
During the meeting, the Council representatives briefed the Indian High Commissioner on key issues related to the Tamil communities, the Council’s current activities and meetings held with the political leaderships of Sri Lanka.
They also exchanged views on various development projects between India and Sri Lanka and various aspects of bilateral cooperation between the two countries.
See less


