#ConnectWithACMC சம்மாந்துறை கருவாட்டுக்கல் – 03 கிராம சேவகர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பயணம் ஆரம்பம்..!
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் புனர்நிர்மாணம் மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முதற்கட்ட கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை கருவாட்டுக்கல் – 03 கிராம சேவகர் பிரிவில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்கள், இளைஞர் மற்றும் மகளிர் பங்களிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள், கிராம மட்ட அமைப்புகளை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர், பிரதேச சபை உறுப்பினர்களான ACM நயீம், AHM காலித், YL பசீர், கட்சியின் முக்கிய உறுப்பினரான MTM லாபிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், பெருமளவிலான மகளிர் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
சம்மாந்துறையில் இருந்து கட்சியின் புனர்நிர்மாணப் பயணத்தை ஆரம்பிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமையும் என கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும், கட்சியின் அமைப்பை கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை பலப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால அரசியல் பயணத்திற்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக மட்டுமல்லாமல், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட வலுவான அரசியல் மறுமலர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ளது.
#ACMC#acmcparty#Sammanthurai#AcmcSammanthurai#Lka#SriLanka#RishadBathiudeen#Mahir